அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கட்டுகளால் தோல்வியடைந்திருந்தது.
இந்த போட்டிக்குப் பின்னர் உரையாற்றிய அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க், தாம் கடந்த 13 ஆண்டுகளாக மாறாத ஒரே திட்டத்தையே பந்துவீச்சின் போது பயன்படுத்துவதாக குறிப்பிட்டார்.
‘பவர் பிளேயின் போது ஃபுல் லெந்தில் விக்கட்டுகளை நோக்கி பந்தை எறிவதும், சில நேரங்களில் சுவிங் செய்வதும் தமது திட்டமாக இருக்கிறது. இந்த திட்டத்தை கடந்த 13 வருடங்களாக மாற்றிக்கொள்ளவில்லை. அது பல தடவைகள் எனக்கு உபயோகமாக இருந்திருக்கிறது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஸ்டாக் 53 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
இதற்கு முந்திய போட்டியில் 4 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இதன்படி தற்போது அவர் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் 9 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.