அவுஸ்திரேலியா மற்றும் ஆர்ஜன்டீன அணிகளுக்கு இடையிலான நொக்கவுட் சுற்றுப் போட்டியில் 2:1 என்ற கோல் கணக்கில் ஆர்ஜன்டீனா வென்றது.
இந்தப்போட்டி லியோனால் மெஸ்ஸியின் 1000ஆவது போட்டியாகும்.
இதில் அவர் பெற்ற கோல் மூலம், உலகக் கிண்ணத் தொடர்களில் அதிக கோல்களை பெற்றவர்கள் வரிசையில் க்றிஸ்டியானோ ரொனால்டோ (8) மற்றும் டியாகோ மெரடோனா (8) ஆகிய இருவரையும் கடந்துள்ளார்.
உலகக்கிண்ணத் தொடர்களில் 9 ஆவது கோலான இது, மொத்தமாக 1000 போட்டிகளில் அவர் பெறும் 789ஆவது கோல் ஆகும்.
இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் ஆர்ஜன்டீனா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஏற்கனவே நெதர்லாந்தும் தகுதி பெற்றிருக்கும் நிலையில், மேலும் இரண்டு அணிகளைத் தெரிவு செய்யும் இரண்டு போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.
இன்றிரவு 8.30க்கு ஆரம்பமாகும் போட்டியில் போலாந்து மற்றும் ஃப்ரான்ஸ் மோதுகின்றன.
இன்று நள்ளிரவுக்குப் பின்னர் நடைபெறவுள்ள போட்டியில் இங்கிலாந்தும் செனேகலும் மோதவுள்ளன.