தனுஷ்க குணதிலக்கவின் கைது | இதுவரை கிடைத்த தகவல்களின் தொகுப்பு

1 year ago
Local Sports
(1378 views)
aivarree.com

1) பாலியல் பலாத்காரம் (Sexual Assault) உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். 

2) அவருக்கு பொலிஸ் பிணை மறுக்கப்பட்ட நிலையில், வீடியோ கொன்ஃபரன்ஸ் மூலம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 

3) டேட்டிங் செயலி ஒன்றின் மூலம் அறிமுகமான 29 வயதான பெண் ஒருவருடன் ரோஸ்வெளி பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த புதன்கிழமை தனிப்பட்ட ரீதியில் இருந்த போது அவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

4) அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 14-16 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 

5) அவர் தொடர்பாக பூரண விசாரணை நடத்தப்படுவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு தடை விதிக்கப்படும் எனவும் சிறிலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது. 

6) உலகக்கிண்ணத் தொடருக்காக அவுஸ்திரேலியா  சென்றிருந்த அவர், காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னரும் அங்கேயே தங்கி இருந்தமை கேள்வியை எழுப்பியுள்ளது. 

7) இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சு, சிறிலங்கா கிரிக்கட்டிடம் விளக்கம் கோரியுள்ளது.


8) ஆனால் அவர் உபரி வீரராக அணியின் முகாமைத்துவம் மேற்கொண்ட தீர்மானத்தின் அடிப்படையில் அங்கே தங்க அனுமதிக்கப்பட்டதாக சிறிலங்கா கிரிக்கட் விளக்கமளித்துள்ளது.