கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 2 போட்டிகள் தடை

1 year ago
Local Sports
(1156 views)
aivarree.com

போர்ச்சுகல் அணித் தலைவரும் புகழ்பெற்ற கால்பந்து வீரருமான க்றிஸ்டியானோ ரொனால்டோவுக்கு காற்பந்து சம்மேளனத்தினால் 2 போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற போட்டியொன்றின் போது இரசிகர் ஒருவரின் கைப்பேசியை தட்டி வீழ்த்திச் சென்றமை தொடர்பான விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவருக்கு இரண்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 50,000 பவுண்ட்ஸ் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த போட்டித் தடையானது உலகக்கிண்ணத் தொடரில் தாக்கம் செலுத்தாது என்றும் அவர் இன்றைய தினம் கானாவுடன் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.