இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரம் சச்சித்ர சேனாநாயக்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டுக்காக அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு கொழும்பு, நீதிவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியது.
கடந்த மாதம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம், இது தொடர்பான விசாரணையைத் தொடங்கிய பின்னர், முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு மூன்று மாத பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.