துவண்டு போனதா இந்தியா?

3 weeks ago
Cricket
(37 views)
aivarree.com

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்ற இந்த போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறுகிறது.

இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா, இன்றைய போட்டியில் சரியாக சோபிக்கத் தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

போட்டியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா வேகமாக துடுப்பாடி ஓட்டங்களை குவித்த போதும், அவர் 31 பந்துகளில் 47 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து அணியின் ஓட்ட வேகம் படிப்படியாக குறைந்துச் சென்றது.

அணிக்கு நம்பிக்கை சேர்த்த விராட் கோலி 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

கே.எல். ராகுல் 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதன்படி இந்திய அணி 50 ஓவர்களில் 240 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 241 ஓட்டங்களைப் பெற வேண்டும்.

இந்த தொடரின் கடந்த போட்டிகளுடன் ஒப்பிடும் போது, இந்த வெற்றி இலக்கு அவுஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்காது என்று கருதப்படுகிறது.

எனினும் இன்றைய ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சற்று சாதகமாக இருக்கும் என்ற அடிப்படையில், இந்த ஓட்ட இலக்கும் சவால்மிக்க ஒன்றுதான் என்னும் கிரிக்கட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.