சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) தலைவருக்கு இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கட் நிர்வாகத்தில் இடம்பெற்ற அரசியல் தலையீடுகள் மற்றும் அது தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஐ.சி.சி 3 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் அது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றைக் கோருவதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.