FA கிண்ண கால்பந்து |ஒரு நிமிடத்தில் 3 சிவப்பு அட்டைகள்

1 year ago
Football
(230 views)
aivarree.com

காற்பந்து ஒழுங்கமைப்பு சவால் கிண்ணம் (FA Cup) கால்பந்து தொடருக்கான தகுதிகாண் போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இதில் நேற்று மென்செஸ்டர் யுனைடட் அணிக்கும் ஃபுல்ஹெம் அணிக்கும் இடையிலான போட்டி நடைபெற்றது.

இதன்போது ஃபுல்ஹெம் அணியின் 3 பேர் போட்டி நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்த போட்டியின் 72ஆவது நிமிடத்தில் பந்து கையில் பட்டமை தொடர்பாக ஃபுல்ஹெம் வீரர் வில்லியமிற்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தை எதிர்த்து போட்டி நடுவரை தள்ளிவிட்டமைக்காக புல்ஹெம் ஸ்ட்ரைக்கர் அலக்சாண்டர் மிட்ரோவிச்சிக்கும் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

இதனை அடுத்து புல்ஹெம் அணியின் பயிற்றுவிப்பாளர் மார்கோ சில்வா, தமக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அவருக்கும் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

இந்த 3 அட்டைகளும் 72ஆவது நிமிடத்திலேயே இடம்பெற்றிருந்தது.

இதேவேளை இந்த போட்டியில் மென்செஸ்டர் யுனைடட் 3க்கு1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.