2 ஆம் நாள் முடிவில் வலுவான நிலையில் இலங்கை

1 year ago
Cricket
(135 views)
aivarree.com

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது.

நிஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை, தற்சமயம் 2021-2023 ஐ.சி.சி. டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பின் கீழ் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.

கிறிஸ்ட்சர்ச்சில் ஆரம்பமான இப் போட்டியின் முதல் நாள் முடிவில் இலங்கை, 75 ஓவர்களை எதிர்கொண்டு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 305 ஓட்டங்களை குவித்திருந்தது.

அணி சார்பில் அதிகபடியாக குசல் மெண்டீஸ் 87 ஓட்டங்களையும், அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 50 ஓட்டங்களையும் மற்றும் அஞ்சலோ மெத்தீவ்ஸ் 47 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க, தனஞ்சய டிசில்வா 39 ஓட்டங்களுடனும், கசூன் ராஜித 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந் நிலையில் இன்றைய தினம் இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பமாக இலங்கை 92.4 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 355 ஓட்டங்களை பெற்றது.

நியூஸிலாந்து சார்பில் பந்து வீச்சில் டிம் சவுத்தி 5 விக்கெட்டுகளையும், மாட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பின்னர் பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்களை பெற்றது.

அணி சார்பில் அதிகபடியாக டொம் லெதம் 67 ஓட்டங்களையும், டெவோன் கான்வே 30 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க, டேரில் மிட்செல் 40 ஓட்டங்களுடனும், மைக்கேல் பிரேஸ்வெல் 09 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

பந்து வீச்சில் இலங்கை சார்பில் அஷித பெர்ணான்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், கசூன் ராஜித ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியுள்ளனர்.

நாளைய போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டாகும்.