172 மில்லியன் யூரோ சம்பளத்துடன் க்றிஸ்டியானோ ரொனால்டோ புதிய அணியில் இணைகிறார்

1 year ago
Football
(981 views)
aivarree.com

பெரும் சர்ச்சைகளின் பின்னர் க்றிஸ்டியானோ ரொனால்டோ மென்செஸ்டர் யுனைடட் கழகத்தில் இருந்து வெளியேறினார். 

37 வயதான அவர் அடுத்ததாக எந்த கழகத்துடன் இணைவார் என்ற கேள்வி எழுந்திருந்தது. 

தற்போது அவர் சவுதி அரேபியாவின் அல் நசர் காற்பந்து கழகத்துடன் இணைந்துக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். 

இதற்கான ஒப்பந்தம் தீர்மானிக்கப்பட்டு விரைவில் கைச்சாத்திடப்படும் என கூறப்படுகிறது. 

அந்த கழகத்தில் இணைவதற்காக க்றிஸ்டியானோ ரொனால்டாவுக்கு வருடாந்தம் 172.9 மில்லியன் யூரோ சம்பளம் வழங்கப்படும். 

இரண்டரை வருடங்களுக்கு அவர் ஒப்பந்தம் செய்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.