ரோஹித் ஷர்மா இரண்டாவது டெஸ்ட்டிலும் இல்லை

1 year ago
Cricket
(540 views)
aivarree.com

பங்களாதேஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் ஷர்மா விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அவர் பங்களாதேஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கயமடைந்த நிலையில், தற்போது இந்தியாவில் தங்கியுள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அவர் தற்போது விளையாடுவது ஆபத்தானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரிக்குப் பின்னர் இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுடனும், அவுஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இந்தியா பல்வேறு போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பங்களாதேஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கே.எல். ராகுல் தலைமை தாங்குவார்.

உதவித் தலைவராக செட்டிஸ்வார் புஜாரா செயற்படுவார்.

முதலாவது போட்டியில் 188 ஓட்டங்களைப் பெற்ற சுப்மன் கில், இந்த போட்டியிலும் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.