அண்மையில் காலியில் நடைபெற்ற பாகிஸ்தான் – இலங்கை டெஸ்ட் தொடரில் ஆட்ட நிரணய சதி இடம்பெற்றதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் எம். பி. நளின் பண்டார குற்றம் சுமத்தி இருந்தார்.
போட்டி நடைபெற்ற ஆடுகளம் எதிரணிக்கு சாதகமாக இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
சீஐடியினர், பாராளுமன்ற உறுப்பினரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
தற்போது இந்த சதிகுறித்த விபரங்களை, தாம் சர்வதேச கிரிக்கட் பேரவையிடம் கையளிக்கவுள்ளதாக நளின் பண்டார எம். பி தெரிவித்துள்ளார்.