இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் தனுஸ்க குணதிலக்க இன்று (07) சிட்னி நீதிமன்றில் வீடியோ கன்ஃபரன்ஸ் மூலம் முன்னிலையானார்.
இதன்போது அவருக்கு பிணை கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் நீதிமன்றம் அதை நிராகரித்து, அவரை திருத்தல் மையம் ஒன்றில் தடுத்துவைக்க உத்தரவிட்டது.
29 வயதான பெண் ஒருவரை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாக தெரிவித்து 4 குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.