தனுஷ்க குணதிலக்கவின் செயற்பாடு தொடர்பாக இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹெல ஜயவர்தன கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ரி20 உலகக் கிண்ண தொடருக்காக சென்றிருந்த இலங்கை அணி இன்று காலை நாடு திரும்பியது.
இதன்போது ஊடகங்களிடன் கருத்து வெளியிட்ட மஹெல, தொழில்சார் கிரிக்கெட்டர்கள் தங்களது நடத்தை குறித்து பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் இலங்கை அணியின் மன நிலையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனவும் அவர் கூறினார்.