செல்சியா முகாமையாளருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் கொலை அச்சுறுத்தல்

1 year ago
Football
(351 views)
aivarree.com

செல்சியா கால்பந்து அணியின் முகாமையாளர் கிரஹாம் பொட்டருக்கு அவரையும் அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வார இறுதியில் சவுத்தாம்ப்டனுக்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் செல்சியாவின் மோசமான தோல்வி அமைந்திருந்தது.

இதனை அடுத்து அவர் ஒரு அநாமதேய கணக்கால் குறிவைக்கப்பட்டதாக பொட்டர் வெள்ளிக்கிழமை வெளிப்படுத்தினார்.

செல்சி 10வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

கடைசியாக விளையாடிய 14 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

சவுத்தாம்ப்டன் தோல்வியை அடுத்து பொட்டர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் அவர் மீதான தனிப்பட்ட தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.

தற்போது பொட்டருக்குஅச்சுறுத்தல்கள் நேரடியாக அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.