சுவிஸ் ஓபன் | பி.வி. சிந்துவும், பிரணாயும் அடுத்தச் சுற்றுக்கு முன்னேற்றம்

1 year ago
Tennis
(635 views)
aivarree.com

பாசலில் நடைபெறும் சுவிஸ் ஓபன் சூப்பர் 300 பூப்பந்து (பேட்மிண்டன்) போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய நட்சத்திர ஷட்லர் ஹெச்.எஸ்.பிரணாய் தகுதி பெற்றுள்ளார்.

இங்கிலாந்து சாம்பியன்ஷிப் வெற்றியாளரான சீனாவின் ஷி யூ கியை வீழ்த்தி அவர் இந்த தகுதியை பெற்றார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு தொடக்கச் சுற்றில் 2018ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்ற ஷி யூ கியை எதிர்த்து 21-17 19-21 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்று, உலகின் 9ஆம் நிலை வீரரான பிரணாய் தொடரலில் தம்மை தக்க வைத்துக் கொண்டார்.

இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும் நான்காம் நிலை வீராங்கனையுமான பி.வி.சிந்துவும், மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் சுவிட்சர்லாந்தின் ஜென்ஜிரா ஸ்டேடெல்மேனை 21-9 21-16 என்ற கணக்கில் வீழ்த்தி, அடுத்தச் சுற்றுக்கு முன்னேறினார்.

பிரணாய் அடுத்ததாக பிரான்சின் கிறிஸ்டோ போபோவை எதிர்கொள்கிறார்.

சிந்து 2022 ஆசிய சாம்பியன்ஷிப்பின் தங்கப் பதக்கம் வென்ற அணியில் இருந்த 20 வயதான இந்தோனேசியாவின் புத்ரி குசுமா வர்தானியை எதிர்கொள்கிறார்.