சவுதியில் முதல் தொடரிலேயே தோற்றார் ரொனால்டோ

1 year ago
Football
(222 views)
aivarree.com

கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நஷ்ர், ரியாத்தில் நடந்த சவுதி சுப்பர் கப் அரையிறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இதனால் சவுதி சூப்பர் கப் தொடரில் இருந்து அல்-நஷ்ர் அணி வெளியேறியது.

மென்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறிய பிறகு, ரொனால்டோ தனது இரண்டாவது போட்டியில் விளையாடினார்.

அல் இட்டிஹாட் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கோல் அடிக்க போராடிய போதும், அது சாத்தியப்பட்டிருக்கவில்லை.

37 வயதான ரொனால்டோ, கோல் அடிப்பதற்கான பொன்னான வாய்ப்பை இழந்தார்.

ரொனால்டோ கோல் அடிக்க இன்னும் சில வாய்ப்புகள் கிடைத்த போதும், அல் இட்டிஹாட்டின் டிஃபென்ஸ் வீரர்கள் அவரை கட்டுக்குள் வைத்திருந்தனர்.

இந்த தொடரிலிருந்து வெளியேறிய அல்-நஷ்ர் அடுத்ததாக ஃபெப்ரவரி 3ஆம் திகதி அன்று சவுதி ப்ரோ லீக்கில் கலந்துக்கொள்கிறது.