தம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முழுமையாக இலங்கை கிரிக்கட் வீரர் தனுஸ்க குணதிலக்க மறுத்துள்ளார்.
அவருக்கு நெருக்கமான தரப்பினரால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 வயதான பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது கடவுச் சீட்டு அவுஸ்திரேலிய பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் 10 தொடக்கம் 12 மாதங்கள் வரையில் தொடரும் என்று கூறப்படுகிறது.
பிணை மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரையில் அவர் அவுஸ்திரேயாவில் தடுப்பில் இருக்க நேரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.