கிரிக்கட் களத்தில் மீண்டும் ரொபின் உத்தப்பா

1 year ago
Cricket
(557 views)
aivarree.com

சர்வதேச மற்றும் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய துடுப்பாட்டக்காரர் ரொபின் உத்தப்பா மீண்டும் 20/20 போட்டிகளில் விளையாடவுள்ளார். 

ஜனவரி மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சர்வதேச லீக் டி20 (ILT20) தொடங்கவுள்ளது.

அதன் முதல் சீசனில் டுபாய் கெப்பிட்டல்ஸுக்காக விளையாட அவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.  

37 வயதான உத்தப்பா, வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முதல் உயர்மட்ட இந்திய வீரர்களில் ஒருவராவார்.

இந்திய உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் விளையாடினாலும், வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாட விரும்புவதாக உத்தப்பா அறிவித்தார். 

ஆனால் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் விதிகள் அவரை அனுமதிக்கவில்லை.  

சர்வதேச மற்றும் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளமையால், உத்தப்பாவுக்கு தற்போது அதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. 

இனி அவர் எதிர்காலத்தில் தி ஹன்ட்ரட், கரீபியன் பிரீமியர் லீக் மற்றும் பிக் பாஷ் லீக் போன்ற ஏனைய தொடர்களிலும் பங்கேற்கும் எதிர்ப்பார்ப்பிலுள்ளார்.