இந்திய அணிக்கு எதிரான கிரிக்கட் போட்டித் தொடரில் பங்கேற்வுள்ள இலங்கை கிரிக்கட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளதுj.
20 பேர் கொண்ட இந்த குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
தசுன் சானக தலைமையிலான இந்த குழாமில், ஒருநாள் போட்டிகளுக்கான அணிக்கு உபத்தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
20க்கு20 போட்டிகளுக்கான அணியின் தலைவராக வணிந்து ஹசரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தொடரில் அஞ்சலோ மெத்தீவ்ஸ் மற்றும் தினேஸ் சந்திமால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதேநேரம், கடந்த எல்.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடி, சிறந்த வளர்முக வீரருக்கான விருதையும் வென்ற விஜயகாந்த் வியாஸ்காந்தும் அணியில் சேர்க்கப்படவில்லை.
அவர் அணியில் உள்வாங்கப்படுவார் என்ற ரீதியிலான கருத்துகள் சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவந்தாலும், 20 பேர் கொண்ட குழாமில் அவர் உள்ளடக்கப்படவில்லை.