கார் விபத்தில் இந்திய கிரிக்கெட்டர் ரிசாப் பாண்ட் படுகாயம்

1 year ago
Cricket
(295 views)
aivarree.com

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பாண்ட், விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் நோக்கி சென்று கொண்டிருந்த போது அவரது கார் கம்பனொன்றில் மோதி தீப்பிடித்தது.

இதில் அவருக்கு தலை, முழங்கால் மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது.

அவரது காலில் எலும்பு முறிவு இருக்கலாம் எனவும், தற்போது அவர் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

-NDTV-