சவுதி ப்ரோ லீக் தொடரில் அல் நஸ்ர் மற்றும் அல் வெஹ்டாவுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது.
இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்கு கோல்களை அடித்தார்.
அத்துடன் அவர் தனது 61வது ஹாட்ரிக் கோல்களையும் அடித்தார்.
அதேநேரம் ரொனால்டோ, போட்டியின் 21-வது நிமிடத்தில் இடது காலால் அடித்த கோல், அவரது 500ஆவது லீக் கோலாக அமைந்தது.
போட்டியின் இடைவேளையின் போது அவர் தனது அணியை 2-0 என முன்னிலைப்படுத்தினார்.
இடைவேளையின் இரண்டாவது பாதியில் மேலும் இரண்டு கோல்களை அடித்து, அல் நஸ்ர் கழகத்தை 4:0 என்ற கணக்கில் வெல்ல வைத்தார்.
38 வயதான ரொனால்டோ இந்த லீக்கில் 5 கோல்களைப் பெற்றுள்ளார்.
கடந்த வாரம் அல் ஃபட்டெஹ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஒரு கோலை பெற்றிருந்தார்.
ரொனால்டோ ஒரு போட்டியில் நான்கு கோல்கள் அடிப்பது இது ஒன்பதாவது முறையாகும்.
இறுதியாக அவர் 2019 இல் லிதுவேனியாவுக்கு எதிராக ஐரோப்பிய உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் 4 கோல்களை போட்டிருந்தார்.
ரொனால்டோவின் இந்த விளையாட்டால், அல் நஸ்ர் போட்டியை 4-0 என்ற கணக்கில் வென்று சவுதி புரோ லீக்கில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.