இலங்கை கிரிக்கட் அணிக்கு வீரர்களை தெரிவு செய்யும் போது, மதம் சார்ந்த அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடருக்கு சாமிக்க கருணாரத்ன உள்ளீர்க்கப்படாமைக்கு, மதவாத குழு ஒன்று வழங்கிய அழுத்தமே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர், சிறிலங்கா கிரிக்கட்டிடம் அறிக்கை ஒன்றை கோரியுள்ளார்.