இந்திய தொடரில் சந்திமாலுக்கும் மெண்டிசுக்கும் இடமில்லை?

1 year ago
Cricket
(641 views)
aivarree.com

ஜனவரி 3-ம் திகதி முதல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கட் தொடர் இடம்பெறவுள்ளது. 

இதற்கான இலங்கை கிரிக்கெட் அணியில் சிரேஷ்ட வீரர்களான ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் இடம்பெற மாட்டார்கள் என்று  ‘அருண’ செய்தி வெளியிட்டுள்ளது.

காலில் காயமுற்ற அவிஷ்க பெர்னாண்டோ, 

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் தொடரை தவறவிட்டிருந்த நிலையில், சத்திரசிகிச்சையின் பின்னர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை, பானுக ராஜபக்ச மற்றும் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார ஆகியோர் T20 போட்டிகளுக்கு மாத்திரம் தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நுவனிந்து பெர்னாண்டோ மற்றும் ஜெஃப்ரி வண்டர்சே ஆகியோர் ஒருநாள் போட்டிகளுக்கு மாத்திரம் பெயரிடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

கடந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கட் தொடரில் அணியில் இடம்பிடித்த இளம் வீரர் துனித் வெல்லாலகேவும் இந்த தொடரில் இணைக்கப்படவுள்ளார்.

விக்கெட் காப்பர் தினேஷ் சந்திமாலுக்கு பதிலாக எல்.பி.எல்.  தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சதீர சமரவிக்ரமவுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய – இலங்கை முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் ஜனவரி 03ம் திகதி நடக்கவுள்ளது.  

ஐந்தாவது மற்றும் ஏழாம் திகதிகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் முறையே புனே மற்றும் ராஜ்கோட்டில் நடைபெறும்.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் ஜனவரி 10, 12 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளன.  

அவை முறையே கவுகாத்தி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறும்.

T20 மற்றும் ODI தொடருக்கான உத்தேச இலங்கை அணி ;- 

தசுன் ஷனக (தலைவர்), பதும் நிஷங்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசங்க, பானுக ராஜபக்ச, அஷேன் பண்டார, நுவனிந்து பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலாகே, மஹீஷ் தீக்ஷன, ஜெஃப்ரி வண்டர்சே, கசுன் ராஜித, லஹிரு குமார, பிரமோத் மதுஷான், டில்ஷான் மதுஷங்க, நுவன் துஷார, சாமிக்க கருணாரத்ன, அவிஷ்க பெர்னாண்டோ.