ஆப்கான் தொடரிலிருந்து பானுக ராஜபக்ச விலகல்

1 year ago
Local Sports
(927 views)
aivarree.com

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கிரிக்கட் தொடரிலிருந்து இலங்கை அணியின் வீரர் பானுக ராஜபக்ச விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தம்மை இந்தத் தொடரில் இருந்து விடுவிக்குமாறு பானுக ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட்டின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி நியூஸ்வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை தற்போது அபுதாபியில் நடைபெற்றுவரும் டி10 தொடரில் பங்கேற்பதற்கு,பானுக ராஜபக்சவுக்கு சிறிலங்கா கிரிக்கெட் அனுமதி மறுத்துள்ளது.