அஞ்சலோ மெத்யூஸை அணியில் இணைக்க விரும்பும் தசுன் ஷானக

1 year ago
Cricket
(242 views)
aivarree.com

இலங்கை அணியின் முன்னாள் வீரர் அஞ்சலோ மெத்யூஸ் மீண்டும் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என விரும்புவதாக இலங்கையின் வெள்ளை பந்து அணிக்கான தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான தொடரிலும் மேத்யூஸ் விலக்கப்பட்டமை குறித்து, பல விமர்சனங்கள் சொல்லப்படுகின்றன.

35 வயதான அவரால் அணிக்கு அதிக பங்களிப்பை வழங்க முடியும் என்று பலர் நம்புகிறார்கள்.

2021 ஏப்ரலில் பிரமோதய விக்கிரமசிங்க தலைமையில் அணித் தேர்வு குழு கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர், அணியிலிருந்து நீக்கப்பட்ட பல சிரேஷ்ட வீரர்களில் மெத்யூஸும் ஒருவராவார்.

இந்த நிலையில், “தாம் மெத்தீவ்ஸை அணியில் இணைக்க விரும்புகின்ற போதும், அது தேர்வாளர்களின் கைகளிலேயே உள்ளது” என்று தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.