திங்கட்கிழமை நடந்த கட்டார் உலகக் கிண்ண போட்டியின் போது வானவில் வர்ண கொடியை ஏந்தி, பின்னால் “ஈரான் பெண்களுக்கு மரியாதை கொடு” என்ற வாசகத்துடனான டி-சேர்ட்டை அணிந்த ஒருவர் மைதானத்துக்குள் பிரவேசித்தார்
போர்ச்சுகலுக்கும் உருகுவேக்கும் இடையிலான ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சுமார் 30 வினாடிகள் அந்த நபர் களத்தில் இருந்தார்.
அவரை பாதுகாப்பு தரப்பினர் சமாளித்து அழைத்துச் சென்றனர்.
அவரது டி-சேர்ட்டின் முன்புறத்தில் “உக்ரைனைக் காப்பாற்று” என்ற வாசகமும் இருந்தது.
முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கான கட்டாயத்தை நீக்குதல் உள்ளிட்ட விடயங்களுக்காக ஈரானில் பெண்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவரது செயற்பாடு அமைந்துள்ளது.