போர்ச்சுகல் – உருகுவே போட்டி நடுவே மைதானத்துக்குள் கொடியுடன் ஓடிய நபர் 

10 months ago
Local Sports
(692 views)
aivarree.com

திங்கட்கிழமை நடந்த கட்டார் உலகக் கிண்ண போட்டியின் போது வானவில் வர்ண கொடியை ஏந்தி, பின்னால் “ஈரான் பெண்களுக்கு மரியாதை கொடு” என்ற வாசகத்துடனான டி-சேர்ட்டை அணிந்த ஒருவர் மைதானத்துக்குள் பிரவேசித்தார்

போர்ச்சுகலுக்கும் உருகுவேக்கும் இடையிலான ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சுமார் 30 வினாடிகள் அந்த நபர் களத்தில் இருந்தார். 

அவரை பாதுகாப்பு தரப்பினர் சமாளித்து அழைத்துச் சென்றனர்.  

அவரது டி-சேர்ட்டின் முன்புறத்தில் “உக்ரைனைக் காப்பாற்று” என்ற வாசகமும் இருந்தது.

முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கான கட்டாயத்தை நீக்குதல் உள்ளிட்ட விடயங்களுக்காக ஈரானில் பெண்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவரது செயற்பாடு அமைந்துள்ளது.