இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கு அணி தலைவர் ரோஹித் சர்மா விளையாடாத நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமை தாங்க உள்ளார்.
இந்த போட்டியிலும் இந்திய அணி கடந்த டெஸ்ட் தொடரில் காண்பித்த ஆதிக்கத்தையே காட்டும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேநேரம் இன்றைய தினம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக இசான் கிஷானும், சப்மன் கிள்ளும் களமிறங்குவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.